பிரிட்டன் அரசு குடிநுழைவு விதிகளைக் கடுமையாக்குகிறது
லண்டன்:
பிரிட்டன் குடியேறிகள் நிரந்தரவாசிகளாக மாறுவதற்கான விதிமுறைகளைப் கடுமையாக்கவிருக்கிறது.
பிரிட்டிஷ் உள்துறை அமைச்சர் ஷபானா மஹ்மூத் (Shabana Mahmood) அதனைத் தெரிவித்தார்.
பிரிட்டனில் 5 ஆண்டு இருந்தவர்கள் அங்கு நிரந்தரமாகத் தங்கும் உரிமைக்குத் தற்போது விண்ணப்பிக்கலாம்.
இனி சமூகத்திற்கு எவ்வளவு தொண்டாற்ற முடியும் என்பதைக் குடியேறிகள் நிரூபிக்கவேண்டும்.
அவர்களுக்கு குற்றப் பின்னணியும் இருக்கக்கூடாது; ஆங்கில மொழி ஆளுமை அவசியம்.
அந்தத் தகுதிகளின் அடிப்படையில் குடியேறிகளின் விண்ணப்பம் பரிசீலிக்கப்படும்.
சீர்திருத்தக் கட்சிக்கு ஆதரவு பெருகும் வேளையில் ஆளும் தொழிற்கட்சி குடிநுழைவுத் திட்டங்களில் மாற்றம் கொண்டுவரப் பரிசீலிக்கிறது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்

