குவைத் குடியுரிமையை இழந்த பஹ்ரைன் குடிமக்களுக்கு பாஸ்போர்ட்டு வழங்க மன்னர் ஹமத் பின் இசா அல் கலீஃபா உத்தரவு
துபாய்:
சமீபத்தில் குவைத் குடியுரிமையை இழந்த பஹ்ரைன் குடிமக்களுக்கு மன்னர் ஹமத் பின் இசா அல் கலீஃபாவின் அரச உத்தரவின் பேரில் புதுப்பிக்கப்பட்ட பஹ்ரைன் பாஸ்போர்ட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட அனைத்து குடிமக்களும் சுதந்திரமாக பயணிக்கவும், இயங்கவும் அடையாளத்துடன் இணைக்கப்பட்ட அத்தியாவசிய உரிமைகளைப் பராமரிக்கவும் இந்த உத்தரவு உறுதி செய்கிறது என்று பஹ்ரைன் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மன்னர் ஹமத்தின் உத்தரவுகளைத் தொடர்ந்து, சமீபத்தில் குவைத் குடியுரிமை ரத்து செய்யப்பட்ட அனைத்து பஹ்ரைன் குடிமக்களுக்கும் பாஸ்போர்ட்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. இதனால் அவர்கள் சுதந்திரமாக பயணிக்க முடியும்.
குடியுரிமைச் சட்டங்களுக்கு இடையில் சிக்கித் தவிப்பவர்களுக்கு குடும்ப ஒற்றுமையையும் சமூக ஒற்றுமையையும் பாதுகாப்பதில் மன்னர் ஹமத்தின் இந்த நடவடிக்கை பலராலும் பாராட்டப்படுகிறது.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்

