16ஆவது பொதுத் தேர்தலை எதிர்கொள்ள மற்ற கட்சிகளுடனான ஒத்துழைப்பை ஏற்க தேசியக் கூட்டணி தயாராகவுள்ளது: டான்ஸ்ரீ மொஹைதின்
பெட்டாலிங் ஜெயா:
நாட்டின் 16ஆவது பொதுத் தேர்தலை எதிர்கொள்ள மற்ற கட்சிகளுடனான ஒத்துழைப்பு ஏற்க தேசியக் கூட்டணி தயாராகவுள்ளது.
அக் கூட்டணியின் தலைவர் டான்ஸ்ரீ மொஹைதின் யாசின் இதனை கூறினார்.
இந்த நடவடிக்கையை தேசியக் கூட்டணியில் அதிகாரப்பூர்வ பங்கேற்பு மூலமாகவோ அல்லது தேர்தல் கூட்டணி வடிவில் தளர்வான ஒத்துழைப்பு மூலமாகவோ செயல்படுத்தலாம்.
அவர்கள் ஆர்வமாக இருந்தால், அவர்களுக்கு இரண்டு வழிகள் உள்ளன.
ஒன்று, அவர்கள் தேசியக் கூட்டணியில் இல் சேர்ந்து, ஒரு கூட்டணி அங்கமாக மாறுகிறார்கள்.
தற்போது, எங்களிடம் நான்கு
கூறுகள் உள்ளன. அவை பெர்சத்து, பாஸ், கெராக்கான், எம்ஐபிபி கட்சிகளாகும்.
அனைத்து கூறு கட்சிகளும் ஒப்புக்கொண்டால், தேசியக் கூட்டணியில் கூடுதலாக புதிய கட்சிகள் சேரும்.
தேர்தல் கூட்டணி என்பது அவர்கள் தேசியக் கூட்டணியின் ஒரு பகுதியாக இல்லை.
ஆனால், அவர்கள் தேர்தல் கூட்டணி உடன் இணைந்து செயல்படுகிறார்கள் என்பதாகும்.
நாங்கள் ஒப்புக்கொண்டால், அவர்கள் ஒரு இடத்தில் போட்டியிட்டால், நாங்கள் போட்டியிட மாட்டோம் என்று நாங்கள் கூறலாம்
பெட்டாலிங் ஜெயாவில் நடந்த மலேசிய இந்திய மக்கள் கட்சியின் ஆண்டு பொதுக் கூட்டத்தை தலைமை தாங்கிய பின்னர் அவர் செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்

