காஷ்மீரில் மூடப்பட்ட சுற்றுலா மையங்கள் திறப்பு
புது டெல்லி:
ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு மூடப்பட்ட 7 சுற்றுலா மையங்கள் மீண்டும் திறக்கப்பட்டன.
இது தொடர்பாக ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா வெளியிட்ட பதிவில், பாதுகாப்பு ஆலோசனைக் குழு கூட்டத்தில் நடத்தப்பட்ட ஆலோசனையின் அடிப்படையில் 7 சுற்றுலா மையங்களை மீண்டும் திறக்க முடிவு செய்யப்பட்டது.
காஷ்மீர், ஜம்மு பிராந்தியத்தில் உள்ள இந்த சுற்றுலா இடங்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக தற்காலிகமாக மூடப்பட்டன என்று தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதத் தாக்குதலால் ஜம்மு காஷ்மீரில் பாதிக்கும் மேற்பட்ட சுற்றுலா மையங்கள் மூடப்பட்டன. தற்போது அவை திறக்கப்பட்டு வருகின்றன.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்

