images

கரூர் விபத்தில் மரணமடைந்தவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்: பாப்பா ராயுடு

image

கரூர் விபத்தில் மரணமடைந்தவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்: பாப்பா ராயுடு

ஷாஆலம் :

கரூர் விபத்தில் மரணமடைந்தவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராயுடு இதனை கூறினார்.

தவெக அரசியல் கட்சி ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தின் போது நடந்த துயர சம்பவம் எனக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

இந்த துயரச் சம்பவம் 40க்கும் மேற்பட்டோரின் உயிரைப் பறித்துள்ளது. இது நம் அனைவரையும் வருத்தப்படுத்தும் ஒரு பேரழிவு இழப்பு.

இந்தியாவிலோ அல்லது உலகின் வேறு எங்கிருந்தோ இருந்தாலும், ஒவ்வொரு பொதுக் கூட்டத்திலும் பாதுகாப்பையும் சரியான திட்டமிடலையும் உறுதி செய்வதன் முக்கியத்துவத்தை இந்த சம்பவம் நமக்கு நினைவூட்டுகிறது.

இதுபோன்ற துயரச் சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க தலைவர்களும் போலிஸ் துறையும் தேவையான நடவடிக்கைகளை எடுப்பார்கள் என்று நான்  நம்புகிறேன்.

சிலாங்கூர் மாநில சட்டமன்ற உறுப்பினர், ஆட்சிக்குழு உறுப்பினர் என்ற முறையில், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கும் ஒட்டுமொத்த தேசத்திற்கும் எனது மனமார்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடையட்டும் என்று பாப்பாராயுடு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

பகிர்
+ - reset