இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன்: தவெக தலைவர் விஜய்
இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன்: தவெக தலைவர் விஜய்
சென்னை:
கரூர் சம்பவத்தால் நான் இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன் என்று தவெக தலைவர் விஜய் கூறினார்.
கரூரில் வேலுசாமிபுரம் பகுதியில் தவெக தலைவர் விஜய் பிரசாரம் செய்தார்.
பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் விஜய் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில்,
இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன்; தாங்க முடியாத, வார்த்தைகளால் சொல்ல முடியாத வேதனையிலும் துயரத்திலும் உழன்று கொண்டிருக்கிறேன்.
கரூரில் உயிரிழந்த எனதருமை சகோதர, சகோதரிகளின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர், விரைவில் குணமடைய பிரார்த்திக்கின்றேன் என பதிவிட்டுள்ளார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்

