இங்கிலாந்து கரபாவ் கிண்ணம்: லிவர்பூல் வெற்றி
இங்கிலாந்து கரபாவ் கிண்ணம்: லிவர்பூல் வெற்றி
லண்டன்:
இங்கிலாந்து கரபாவ் கிண்ண கால்பந்து போட்டியில் லிவர்பூல் அணியினர் வெற்றி பெற்றனர்.
அன்பீல்டு அரங்கில் நடைபெற்ற மூன்றாவது சுற்று ஆட்டத்தில் லிவர்பூல் அணியினர் சௌத்ஹாண்டன் அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய லிவர்பூல் அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் சௌத்ஹாம்டன் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
லிவர்பூல் அணியின் கோல்களை அலெக்ஸாண்டர் இசாக், ஹூகோ எகிதேக் ஆகியோர் அடித்தனர்.
மற்றொரு ஆட்டத்தில் செல்சி அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் லிங்கன் சிட்டி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
வோல்வேர்ஹாம்டன் அணியினர் 2-0 என்ற கோல் கணக்கில் எவர்ட்டன் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
மற்ற ஆட்டங்களில் பிரிக்டோன், கார்டிவ் சிட்டி, புல்ஹாம் ஆகிய அணிகள் வெற்றி பெற்றன.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்

