கேரளாவில் ஆபத்தான மூளை தின்னும் உயிரணு
திருவனந்தபுரம்:
இந்தியாவின் கேரள மாநிலத்தில் அபாயகரமான மூளை தின்னும் உயிரணு அதிகளவில் பரவுகிறது.
அந்த அரிய வகை உயிரணுவால் உயிரிழப்பு ஏற்படலாம்.
கடந்த ஆண்டு 36 சம்பவங்களும் 9 மரணங்களும் பதிவானதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
இந்த ஆண்டில் இதுவரை 69 சம்பவங்களும் 19 மரணங்களும் பதிவானதாக மாநிலச் சுகாதார அமைச்சர் கூறினார்.
சம்பவங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை அல்ல என்றும் சொல்லப்பட்டது.
கடந்த மாதம் (ஆகஸ்ட்) 3 மாதக் குழந்தை உட்பட 3 பேர் மாண்டனர்.
அந்தப் பெரும் சுகாதாரச் சிக்கலைக் கையாள அதிகாரிகள் சோதனைகள் மேற்கொள்கின்றனர்.
உயிரணுக்கள் நீர்நிலைகளில் தழைப்பதால் அவற்றை அகற்றும் முயற்சியாகப் பொதுமக்கள் குளிக்கும் இடங்களில் குளோரின் (chlorine) கலக்கப்படுகிறது.
ஆதாரம்: NDTV
தொடர்புடைய செய்திகள்

