இந்தியாவில் 7 கோடிக்கும் அதிகமானோர் வருமான வரி தாக்கல் செய்தனர்: ஒரு நாள் நீட்டிப்பு
புது டெல்லி:
இந்தியாவில் 7 கோடிக்கும் அதிகமானோர் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்துள்ளனர். வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய மேலும் செவ்வாய்க்கிழமை ஒரு நாள் நீட்டிக்கப்பட்டது.
முன்னதாக வருமான வரி இணையதளத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதாக வரி செலுத்துவோர் புகார் தெரிவித்தனர்.
எனினும், செப்டம்பர் 15ம் தேதி வரையில் 7 கோடிக்கும் அதிகமானோர் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ததாக வருமான வரித் துறை தெரிவித்தது.
கடந்த ஆண்டு 7.28 கோடி பேர் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்திருந்தனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்

