வக்பு திருத்தச் சட்டத்துக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளிக்கிறது
புது டெல்லி:
ஒன்றிய அரசு அமல்படுத்தி உள்ள வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக வழக்கில் உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பை அளிக்கிறது.
கடந்த மே 22 -ம் தேதி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வு தீர்ப்பை ஒத்திவைத்தது.
ஒன்றிய அரசு கொண்டு வந்த வக்பு திருத்தச் சட்டம் முஸ்லிம்களின் நிலங்களை அபரகரிக்கும் நடவடிக்கை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இந்த சட்டத் திருத்தத்துக்கு எதிராக 70க்கும் மேற்பட்ட மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
அதில் 5 மனுக்களை மட்டும் விசாரணைக்கு ஏற்று, மூன்று அம்சங்கள் மீது மட்டும் உச்சநீதிமன்றம் விசாரித்தது.
மாநில வக்ஃப் வாரியங்கள், மத்திய வக்ஃப் கவுன்சில் பதவிகளில் மாற்று மத உறுப்பினர்களை சேர்த்து நிர்வகிப்பதும் இடம்பெற்றுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்

