இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல் வெற்றி
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல் வெற்றி
லண்டன்:
இங்கிலாந்து பிரிமியர் லீக் கால்பந்து போட்டியில் அர்செனல் அணியினர் வெற்றி பெற்றனர்.
எமிரேட்ஸ் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் அர்செனல் அணியினர் நாட்டிங்காம் போரஸ் அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அர்செனல் அணியினர் 3-0 என்ற கோல் கணக்கில் நாட்டிங்காம் போரஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
அர்செனல் அணிக்காக மார்டின் ஷுபெண்டி இரு கோல்களை அடித்தார். மற்றொரு கோலை விக்டர் அடித்தார்.
மற்றொரு ஆட்டத்தில் செல்சி அணியினர் 2-2 என்ற கோல் கணக்கில் பிரின்போர்ட் அணியுடன் சமநிலை கண்டனர்.
எவர்ட்டன் அணியினர் கோல் எதுவும் அடிக்காமல் அஸ்டன் வில்லா அணியுடன் சமநிலை கண்டனர்.
மற்ற ஆட்டங்களில் டோட்டன்ஹாம், நியூகாஸ்டல், புல்ஹாம், ஏஎப்சி போர்னமௌத் ஆகிய அணிகள் வெற்றி பெற்றன.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்

