பெண் நடுவரை அறைந்த கொலம்பிய கிளப் வீரர்
பெண் நடுவரை அறைந்த கொலம்பிய கிளப் வீரர்
கொலம்பியா:
பெண் நடுவரை கொலம்பிய கால்பந்து கிளப் வீரர் அறைந்த சம்பவம் பெரும் சர்ச்சையாகியுள்ளது.
இந்த வாரம் டெபோர்டிவோ குயிக் அணிக்கு எதிரான போட்டியின் போது,
பெண் நடுவர் வனேசா செபாலோஸை ரியல் அலியான்சா கேடகுரா வீரர் ஜேவியர் பொலிவர் அறைந்தார்.
ஓரங்கட்டப்பட்டிருந்த பொலிவருக்கு சிவப்பு அட்டை காட்டப்பட்ட 66வது நிமிடத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்தது.
இருப்பினும், செபாலோஸ் தனது கையை கீழே இறக்குவதற்கு முன்பு, பொலிவர் விரைந்து வந்து அவரது வலது கையால் முகத்தில் அறைந்தார்.
இந்த சம்பவம் அரங்கத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.
சக வீரர்களும் எதிரணி வீரர்களும் உடனடியாக பொலிவருக்கு எதிராக நடுவர் பழிவாங்குவதைத் தடுத்தனர்.
கோல்கீப்பர் பொலிவரைத் தள்ளிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்

