இந்தியாவின் வட மாநிலங்களில் கன மழை: 41 பேர் ஜம்மு காஷ்மீரில் உயிரிழப்பு
புது டெல்லி:
இந்தியாவின் வட மாநிலங்கள் கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
ஜம்மு காஷ்மீரில் மேக வெடிப்பால் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் நிலச் சரிவுகளில் சிக்கி 41 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் வேஷ்ணவ தேவி கோயிலுக்கு சென்ற பக்தர்கள் 34 பேரும் அடங்குவர்.
ஜம்முவில் 1910 ஆம் ஆண்டுக்கு பிறகு ஒரே நாளில் 380 மி.மீ. மழை பெய்துள்ளது.
பீஸ் நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பஞ்சாபில் பெரும்பாலான பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.
டெல்லியில் இயல்பை விட 60% அதிக மழை பெய்துள்ளது. இமாச்சலப் பிரதேசத்தில் மேகவெடிப்பு, நிலச்சரிவுகள் மற்றும் திடீர் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்

