ஒரு நிமிஷத்துக்கு 25,000 ரயில்வே டிக்கெட்டுகள் புக்கிங் செய்யப்படுகின்றன
புது டெல்லி:
நிமிஷத்துக்கு 25,000 ரயில் பயண டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்படுவதாக அத்துறையின் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
இதுதொடர்பாக மக்களவையில் அவர் கேள்விக்கு பதிலளித்த அவர், பிஆர்எஸ் முறையில் தற்போது நிமிஷத்துக்கு 25,000 பயணச்சீட்டுகள் முன்பதிவு செய்யப்படுகிறது.
இதை மேலும் அதிகப்படுத்துவதற்கான தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் பின்னர் 4 மடங்கு கூடுதலாக பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யலாம் என்றார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்

