பேராசிரியர் காதர் மொகிதீனுக்கு தகைசால் தமிழர் விருது: சுதந்திர தின விழாவில் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்
பேராசிரியர் காதர் மொகிதீனுக்கு தகைசால் தமிழர் விருது: சுதந்திர தின விழாவில் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்
சென்னை:
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீனுக்கு தகைசால் தமிழர் விருதை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு அப்துல் கலாம், கல்பனா சாவ்லா விருதுகளையும் வழங்கினார்.
சென்னையில் நேற்று நடைபெற்ற சுதந்திர தின விழாவில், இந்த ஆண்டுக்கான விருதுகள், சிறப்பு பரிசுகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். அந்த வகையில், ‘தகைசால் தமிழர்’ விருதை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீனுக்கு வழங்கினார். ரூ.10 லட்சம் விருதுத் தொகை, சான்றிதழும் வழங்கப்பட்டது.
இஸ்ரோ தலைவர் நாராயணனுக்கு டாக்டர் ஏபிஜே.அப்துல் கலாம் விருதும், துளசிமதி முருகேசனுக்கு துணிவு, சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருதும் வழங்கப்பட்டன. விருதுடன் தலா ரூ.5 லட்சம் பரிசுத் தொகை, பதக்கமும் வழங்கப்பட்டது.
நல்ஆளுமை விருது:
பின்னர், பல்வேறு பிரிவுகளில் நல்ஆளுமை விருதுகள் வழங்கப்பட்டன. சமுதாய பங்கேற்பு மூலம் மாற்றத்தை கொண்டுவரும் ஊரக மேம்பாட்டு முயற்சிகள் பிரிவில் உதவி காவல் கண்காணிப்பாளர் வி.பிரசன்ன குமார், வட்டாட்சியர் ப.பாலகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் வீ.யமுனா விருது பெற்றனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்

