ஆக்சியம் 4 திட்டம்: இந்திய வீரர் சுபான்ஷு சுக்லாவுடன் விண்ணில் பாய்ந்தது டிராகன் விண்கலம்
ஆக்சியம் 4 திட்டம்: இந்திய வீரர் சுபான்ஷு சுக்லாவுடன் விண்ணில் பாய்ந்தது டிராகன் விண்கலம்
வாஷிங்டன்:
ஆக்சியம் 4 திட்டத்திற்காக இந்திய வீரர் சுபான்ஷு சுக்லாவுடன் டிராகன் விண்கலம் இன்று விண்ணில் பாய்ந்ததை நாசா உறுதிப்படுத்தியது.
ஆக்சியம் 4 திட்டம் இன்று வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது.
இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட 4 பேர் இன்று விண்வெளி பயணம் மேற்கொண்டனர்.
புளோரிடாவிலிருந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன்-9 ராக்கெட் மூலம் டிராகன் விண்கலத்தில் நால்வரும் விண்வெளிக்குப் பயணித்துள்ளனர் என்று நாசா தெரிவித்தது.
முன்னதாக, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன்-9 ராக்கெட் மூலம் டிராகன் விண்கலத்தில் அவர்கள் செல்ல இருந்த பயணம், தொழில்நுட்ப கோளாறு, மோசமான வானிலை ஆகியவை காரணமாக 6 முறை ஒத்தி வைக்கப்பட்டது குறிப்ப்பிடத்தக்கது.
- அஸ்வினி செந்தாமரை

