தங்கத்தின் விலை 3,400 அமெரிக்க டாலர்களுக்கு மேல் உயர்ந்து புதிய சாதனை அளவை எட்டியுள்ளது
கோலாலம்பூர்:
உலகளாவிய வர்த்தக நிச்சயமற்ற தன்மை பாதுகாப்பான முதலீடுகளின் தேவையைத் தூண்டியதால், தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியது.
தற்போது ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 3,405.19 அமெரிக்க டாலர்களை எட்டியது.
அனடோலு அஜான்சியின் கூற்றுப்படி, இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்த விலையை எட்டிய பிறகு, தங்கத்தின் தற்போதைய விலை சுமார் 3,404.40 அமெரிக்க டாலராக உள்ளது.
உலகின் இரண்டு பெரிய பொருளாதார சக்திகளுக்கு இடையிலான வர்த்தக மோதல் தொடர்ந்து அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்த முதலீட்டாளர்களின் கவலைகளால் தங்கத்தின் விலை 2.3 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்தது.
கடந்த வாரம் ஐரோப்பிய மத்திய வங்கி வட்டி விகிதங்களை 25 அடிப்படைப் புள்ளிகள் குறைத்த பிறகு, மத்திய வங்கிகள் வட்டி விகிதங்களைக் குறைக்கும் போக்கும் தங்கத்தின் விலை உயர்வுக்கு பங்களித்தது.
ஏப்ரல் 2 ஆம் தேதி 180க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு எதிராக வரிகளை அமல்படுத்துவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்து தங்கத்தின் விலையில் ஏற்பட்ட ஏற்றம் மேலும் தெளிவாகியது.
- பார்த்திபன் நாகராஜன்

