வெளிநாடுகளில் இருந்து வாகனங்ளை இறக்குமதி செய்ய இலங்கை அரசு மீண்டும் அனுமதி
கொழும்பு:
வெளிநாடுகளில் இருந்து வாகனங்ளை இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.
இது குறித்து அதிபா் அலுவலகத்தின் செய்திப் பிரிவு சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த கடுமையான தடையை நீக்குவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. வரும் அக்டோபா் 1-ஆம் தேதியிலிருந்த மூன்று கட்டங்களாக இந்தத் தடை தளா்த்தப்படும். 2025 பிப்ரவரிக்குள் தடை முழுமையாக விலக்கப்படும்.
வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த கடுமையான தடையை நீக்குவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. வரும் அக்டோபா் 1-ஆம் தேதியிலிருந்த மூன்று கட்டங்களாக இந்தத் தடை தளா்த்தப்படும். என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பொருளாதாரத்தை சகஜ நிலைக்குக் கொண்டு வரும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- ஆர்யன்

