டிசம்பர் 5-ஆம் தேதி இந்தியா வருகிறார் ரஷிய அதிபர் புதின்
புது டெல்லி:
ரஷிய அதிபர் விளாதிமிர் புதின் வரும் டிசம்பர் 5ம் தேதி இந்தியா வருகிறார்.
அமெரிக்காவுடனான இந்திய உறவில் பாதிப்பு ஏற்படுள்ளநிலையில், அதிபர் புதினின் தில்லி வருகை முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இதனிடையே, அவமானத்தை இந்தியா ஒருபோதும் பொறுத்துக் கொள்ளாது என்று ரஷிய அதிபர் புதின் இந்தியாவுக்கு ஆதரவாக பேசியுள்ளார்.
ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதால் உக்ரைன் போர் தொடர்வதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டி வருகிறார்.
இந்நிலையில், ரஷிய அதிபர் புதினின் தில்லி வருகையின்போது, இருநாடுகளுக்கு இடையே பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.
கடந்த 2021ம் ஆண்டு புதின் இந்தியாவுக்கு வந்திருந்தார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்

